OneKural
பொருட்பால் · அமைச்சு
அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.
பொருள்
அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
638 / 1330