OneKural
பொருட்பால் · குற்றங்கடிதல்
செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.
பொருள்
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
437 / 1330