பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும்.
பொருள்
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.