காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.
பொருள்
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.