OneKural
இன்பத்துப்பால் · பொழுதுகண்டு இரங்கல்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.
பொருள்
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.
1224 / 1330